tamilnadu

img

எவர்வின் பள்ளியில் 74ஆவது சுதந்திர தின விழா

சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 74ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களாக திகழும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் 273 பேருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத்தமன், முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.