திருவள்ளூர், டிச. 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 16 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதென திமுகவுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கீழ்கண்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட தாம ரைப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பத விக்கு சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், திருக்கண்டலம் ஒன்றிய கவுன்சிலர்பதவிக்கு கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர் பி.ரவி, புன்னப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பத விக்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர் சி.பாலாஜி, கும்மிடிப்பூண்டி வட்டத் தில் நத்தம் ஒன்றிய கவுன்சிலர் பொறுப் பிற்கு கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், சிறுபுழல்பேட்டை கவுன்சிலர் பொறுப்பிற்கு கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் எம்.ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி மன்றத்தலைவர்கள்
ஊராட்சி மன்ற தலைவர் பொறுப் பிற்கு போட்டியிட்பவர்கள் பட்டியல் விவரம் வருமாறு: கும்மிடிப்பூண்டியில் வட்டத்தில் மேல்முதலம்பேடு ஊராட்சிக்கு மணிக் கலா-சீனு, மீஞ்சூர் ஒன்றியத்தில் தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் கட்சியின் பகுதி குழு உறுப்பினரும், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், சிறுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு கட்சியின் பகுதிக் குழு உறுப்பினர் எஸ். இ.சேகர், வாயலூர் ஊராட்சி மன்றத் தலை வர் பொறுப்பிற்கு ராஜேந்திரன், ஏலி யம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு டி.மகேஸ்வரிதேவராஜ், சோழவரம் ஒன்றியத்தில் பெரிய முல்லைவாயல் ஊராட்சி மன்ற தலை வர் பதவிக்கு வி.ஈஸ்வரி முனுசாமி, ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லையன், அலமாதி ஊராட்சி தலைவர் பதவிக்கு கட்சியின் மாவட் டக் குழு உறுப்பினர் அ.து.கோதண்டன், திருவள்ளூர் வட்டத்தில் திருகூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் இ.மோகனா கடம்பத்தூர் ஒன்றியத்தில் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜி.ஆறுமுகம் பூந்த மல்லி ஒன்றியத்தில் கொசவன்பாளை யம் ஊராட்சி மன்றத் தலைவர் பத விக்கு தமிழ் அழகி ஜெயராமன், ஊத்துக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட காக்க வாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏ.மாரிமுத்து, மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வி. விஜயன், வண்ணாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்பதவிக்கு என்.சசிக் குமார், தண்டலம் ஊராட்சி மன்ற தலை வர் பதவிக்கு ரெபேக்கால் முத்துக் குமார், பூரிவாக்கம் ஊராட்சி மன்ற தலை வர் பதவிக்கு குணசுந்தரி மோகன் ஆகி யோர் போட்டியிடுகின்றனர்.
போட்டியின்றி தேர்வு
அத்தங்கி காவனூர் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச் செயலாளர் எஸ்.ஆஷா பொது பெண்கள் வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்லாபுரம் ஒன்றியம் நெய்வேலி ஊராட்சி அன்னதான காக்கவாக்கம் (ஆதி திராவிடர்) ஊராட்சி வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் ராஜ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருத்தணி ஒன்றியம் தாடூர் 6 வது வார்டில் சேகர், புஜ்ஜிரெட்டிபள்ளி 6 வது வார்டில் கன்னியப்பன் ஆகிய இரண்டு பேர் வார்டு உறுப்பினர்களாக போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.