tamilnadu

img

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வு வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 4,216 மையங்களில் 9.76 லட்சம் பள்ளி மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். இதில், தனித்தேர்வர்கள் 37,798 பேரும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 13,151 பேரும், மாற்றுப் பாலினத்தவர் 5 பேரும், சிறையிலிருந்து 2,64 பேரும் தேர்வெழுதுகின்றனர்.