வழக்குரைஞர் சங்கங்களோடு கலந்து பேசி நீதிமன்றங்களை திறக்க வேண்டும், வழக்குரைஞர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், இளம் வழக்குரைஞர்களுக்கு அரசு அறிவித்த 3000 ரூபாயை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கற்பட்டு நீதிமன்றம் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஜோஸ்பின் விஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டதில் மூத்த வழக்குரைஞர்கள் தணிகைவேல், ராமசாமி, ஜெயபிரபு உள்ளிட்டோர் பேசினர்.