வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த வசதி வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக ரூ.2 லட்சம் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.