tamilnadu

img

“சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை திரும்பப் பெறும்வரை போராட்டம் ஓயாது”

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய வற்றைத் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை, அம்பத்தூர் அனைத்து ஜமாத்  கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 6)  பாடி பிரிட்டானியா பேருந்து நிறுத்தம் அருகி லிருந்து பேரணியும், பாடி மேம்பாலம் அரு கில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

மக்கள் ஒற்றுமை மேடையின் அம்பத்தூர்  பகுதி ஒருங்கிணைப்பாளர் சு.பால்சாமி தலை மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது: வடகிழக்கு தில்லியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது, அருகில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்த குண்டர்கள்தான் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் 53 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், நூற்  றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ள னர். கொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்  சலி செலுத்தக் கூட பாஜக மோடி அரசு தயா ராக இல்லை. இந்த பிரச்சனை தில்லி உயர்நீதி மன்றத்திற்கு வந்த போது நீதிபதி முரளீதர், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது ஏன் வழக்குப்  பதியவில்லை எனக் கேட்டார். உடனே அந்த  நீதிபதி பஞ்சாப் அரியானா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அரசை நீதிபதிகளே விமர்சித்  தால் கூட இடமாற்றம் செய்யப்படுவார்கள் என மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளது.

எச்.ராஜாமீது வழக்குப்பதிய மறுப்பதேன்?

தமிழகத்தில் போராடுபவர்களைப் பார்த்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா  கூறுகிறார். அமைதியாகக் கலைந்து செல் லுங்கள் இல்லையென்றால் நாங்கள் உங்  களை அப்புறப்படுத்துவோம் என்று வன்  முறையைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார்.  அவர் மீது காவல் துறை வழக்குப் பதிய வேண்டாமா? அதிமுக, பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஒருபோதும் இஸ்லாமியர்களைத் தனி மைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்.  மக்களவை, நீதித்துறை, காவல் துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனா லும் கூட ஷாகின்பாத் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எத்தனை  அடக்குமுறையை ஏவினாலும், எத்தனை உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை வாபஸ் பெறும்வரை போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் பேசினார்.

திருவடி குடில் சுவாமி

கும்பகோணம் திருவடி குடில் சுவாமி பேசு கையில், மதநல்லிணக்க கூட்டத்திற்கு தானே  செல்வீர்கள், ஏன் போராட்டத்திற்குச் செல்கி றீர்கள் எனச் சிலர் கேள்வி கேட்கின்றனர். இஸ்லாமியர்கள் அவர்கள் வீட்டில் திருமணம்  என்று அழைத்தால் பிரியாணி சாப்பிடுவ தற்கு மட்டும் செல்லக் கூடாது. அவர்களுக்குத்  துன்பம் என்றால் அவர்களுடன் துணை நிற்பது தான் மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம்.  மத்திய அரசின் ஒவ்வொரு நகர்வும் ஒரு மார்க்கத்தை, ஒரு சமயத்தை நோக்கி நகர்ந்து  கொண்டிருக்கிறது. சமூகத்தில் பரஸ்பர  அன்பையும், ஒற்றுமையையும் உருவாக்கு வதுதான் எங்கள் பணி. எனவே நாங்கள் அமைதியாக இருக்க முடியாது, எங்கள் கட மையை நாங்கள் நிறைவேற்றியே தீரு வோம். இஸ்லாமியர்கள் இல்லாத இந்தி யாவை உருவாக்க நினைத்தால் அதை முறிய டிப்போம். இஸ்லாமியர்களைத் தீண்ட நினைத்  தால் எங்கள் உடம்பின் மீது ஏறித்தான் அவர்களைத் தீண்ட முடியும் என்றார்.

இல்லை என்றால் இருக்கிறது என்று அர்த்தம்

ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது மக்க ளுக்கு எதிரான சட்டம் என்று தெரிந்தாலும் கூட, இது அவர்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று கூறுவார்கள். மத்திய பாஜக அரசு இதில் பாதிப்பில்லை என்று கூறி னால் நிச்சயமாக அதில் பாதிப்பு இருக்கிறது  என்று அர்த்தம். தமிழக டாஸ்மாக் முதல்வர் எடப்பாடிக்கு இந்த சட்டத்தை எதிர்க்கத் தைரியமில்லை. ஒருவரிடம் அவருடைய அப்பாவைக் காண்பித்து இதுதான் உங்கள் அப்பாவா எனக் கேட்டால் எப்படி கோபம் வருமோ? அதுபோல் இந்தியர்களைப் பார்த்து நீ இந்தியனா எனக் கேட்டால் கோபம் வரவேண்டாமா என அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களின் போராட்டம் தோற்றதில்லை

மாநில ஜமாத்துல் உலமா சபையின் துணை பொதுச் செயலாளர் ஏ.அப்துல் அஜிஸ்  பாகவி பேசுகையில், ஒரு அரசின் கருப்புச்  சட்டமும் அதை எதிர்த்த மக்களின் போராட்ட மும் தோற்றதில்லை என்பதுதான் வரலாறு. பிரதமர் போராடுபவர்களின் உடையைப் பாருங்கள் யார் போராடுகிறார்கள் எனத் தெரி யும் என்று கூறினார். ஆனால் இந்த கருப்பு  சட்டத்திற்கெதிராக ஜவஹர்லால் பல்கலைக்  கழக மாணவன் ஒருவன் தன்னுடைய சட்டி யைக் கிழித்து பூணுலை காண்பித்து நான் சிஏஏவை எதிர்க்கிறேன் என்று கூறினார். சென்னை ஐஐடியில் படித்த ஜெர்மன் மாண வன் இந்த சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தான். இந்த சட்டத்தை ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள்தான் எதிர்ப்பதாக மத்திய அரசு காட்ட முயற்சிக்கிறது, ஆனால் நாட்டு மக்கள்  மத வேறுபாடு இல்லாமல் சாதி வித்தியாச மில்லாமல் மக்கள் போராடிக் கொண்டி ருக்கிறார்கள் என்றார்.

வரலாற்றை மாற்றுகிறார்கள்

ஆங்லிகன் திருச்சபை பேராயம் பேரா யர் ஜோசப் மோகன்குமார் பேசுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்க ளுக்கிடையே சர்வ சமய நல்லிணக்கத்தின் மூலம் அகிம்சை முறையில் நாடு முழுவ தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மத்திய பாஜக அரசு அடையா ளங்களை அழிக்கிறது, வரலாற்றை மாற்று கிறது. எனவே நாம் விழிப்புடன் இருக்க  வேண்டும். ஆன்மீக தலைவர்கள் அனை வரும் இப்படிப்பட்ட போராட்டங்களில் பங்கேற்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்  கொண்டார். ஆர்.எஸ்.எஸ். இல்லா இந்தியாவை உரு வாக்குவோம் விசிக கொள்கை பரப்புச் செய லாளர் சிபிசந்தர் பேசுகையில்,  ஒரு அரசு மதம் சார்ந்து செயல்படக் கூடாது என அரசிய லமைப்பு கூறுகிறது. ஆனால் மத்திய மோடி  அரசு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை யும், பன்முகத்தன்மையையும் சீர்குலைத்துக்  கொண்டிருக்கிறது. எனவே பாசிசம் வீழும் வரை போராடுவோம். ஆர்.எஸ்.எஸ். இல்லா  இந்தியாவை உருவாக்குவோம் என்றார்.

முன்னதாக அம்பத்தூர் அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் எச்.பீர்முகமது வர வேற்றார். செயலாளர் ஏ.மொய்தீன்பாஷா நன்றி கூறினார். இதில் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.என்.சிராஜூதின், பொருளாளர் என்.காதர்மொய்தின், துணை செயலாளர் ஏ.முகமதுஷா, எஸ்.ஏ.சாகுல் அமீது, மன்சூர்,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜ், தாமோதரன் (மதிமுக) உள்ளிட்ட 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.