உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை,மே 13- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் வியாழனன்று நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதுவரை 61 பேர் இந்த வைரஸ் தாக்கி இறந்துள்ள னர். 8 ஆயிரத்து 718 பேர் வைரசி னால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை யில், வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப் படும் என்று தமிழக அரசு அறி வித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங் களில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், வைரஸ் தொற்றை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். ஏற்கனவே, தமிழகத்தில் 200 குழந்தைகள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால், கொரோ னா வைரஸ் தொற்று மாணவர்களி டையே பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தடை விதிக்க வேண்டும். அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வியாழனன்று நடைபெறுகிறது.