சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரான பசலில் நடைபெற்ற 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி சிந்து ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் பந்தாடித் தங்கப்பதக்கத்துடன் புதிய வரலாறு படைத்தார். இந்நிலையில் திங்களன்று தாயகம் திரும்பிய சிந்துவிற்குத் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.