tamilnadu

img

ஆப்கானிஸ்தானில் பனிச் சரிவு: 21 பேர் பலி

காபூல், பிப்.15- ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பனிச் சரிவுகளில் சிக்கி, 2 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்தனர். மத்தியில் அமைந்துள்ள தய்கண்டி மாகாணத்தில், அடுத்த டுத்து பனிச் சரிவுகள் ஏற்பட்டதில், அந்தப் பகுதியிலிருந்த 50 வீடுகள் நாசமாகின. இதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்தனர்.  மேலும், 10 பேர் காயமடைந்தனர். இதுதவிர, இந்த பனிச் சரிவில் சிக்கிய 7 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகிறனர். பனிச் சரிவு ஏற்பட்ட பகுதியில் கடுமையான பனிப் பொழிவு இருக்கிறது. அதுமட்டுமன்றி, புதிய பனிச் சரிவுகள் ஏற்படும் அபாய மும் உள்ளது. இதனால் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை மேலும் அதி கரிக்கக் கூடும் என்று அஞ்சப்படு கிறது என அந்த நாட்டு பேரிடர் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பா ளர் தமீம் ஆஸிமி தெரிவித்துள்ளார்.