மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஈரோடு, ஜீலை 12- பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமலாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட் டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள் ளதாவது, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 150 மருத்துவர்கள் உட்பட செவி லியர்கள், பணியாளர்கள் என 371 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஜூன் 2020- க்கான சம்பளம் இன்னும் வழங்கப் படவில்லை. எனவே கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பணியாற்றிவரும் மருத் துவர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும். மேலும், கிரிஸ்டல் நிறுவனம் மூலம் சமீபத்தில் 220 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப் படும் என அந்நிறுவனம் அறிவித்தும் தற் போது வரை வழங்கவில்லை. எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதி யத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக உடனடி யாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.