tamilnadu

img

அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி

அமெரிக்காவின் விர்ஜினியா நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் உள்ள நகராட்சி கட்டிட வளாகத்திற்குள் புகுந்த நகராட்சியின் ஊழியர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியவரை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.