tamilnadu

img

ஹிரோஷிமா 75

டோக்கியோ, ஆக.4- ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு வீசிய கொடூரச் சம்ப வத்தின் 75-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகர் மீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி அணுகுண்டு வீசியது அமெரிக்கா.  இதில் ஏராளமான பொரு ட்சேதங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. வானளவு உயர்ந்த கட்டிட ங்கள் தரைமட்டமாகின. இதில் ஒரு லட்சத்து 40ஆயி ரம் பேர் கொல்லப்பட்டனர்.

அன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹாரி எஸ் ட்ரூமன் குண்டு வீசப்பட்ட தகவலை அட்லாண்டிக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட போர்கப்பல் அகஸ்டாவிலிருந்து அறி வித்தார். இதற்கு முன் உரு வாக்கப்பட்ட பெரிய குண்டை விட இரண்டாயிரம்  மடங்கு பெரிய குண்டு எனவும் ட்ரூமன் கூறினார்.  ஹிரோஷிமா மீது வீசப் பட்ட குண்டுக்கு “லிட்டில் பாய்” எனப் பெயர் வைக்கப் பட்டிருந்தது. முந்தைய அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும்வகையில் இந்தப்  பெயர் வைக்கப்பட்டிருந்தது. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியை அந்த அணுகுண்டு கொண்டி ருந்தது.  உள்ளூர் நேரப்படி காலை  8.15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B-29 விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது. குண்டு விழுந்த  இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் அப்போதே ஆவியாகினர். ஹிரோஷிமாவில் வசித்த 3 லட்சத்து 50 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த  குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

குண்டுவெடிப்பின் மையப்பகுதியில் வெப்பநிலை 7,000 டிகிரி செல்சியஸ் (12,600 பாரன்ஹீட்) ஐ- எட்டியது, இது சுமார் மூன்று கிலோமீட்டர் (ஐந்து மைல்) சுற்றளவில் அபாயகரமான தீக்காயங்களை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பின் போது எழுந்த ஒளியின் தீவிரம் (ப்ளாஷ்) காரணமாக தற்காலிகமாக, நிரந்தரமாக மக்கள் நிரந்தர குருட்டுத்தன்மை அடைந்தனர். அடுத்தடுத்து கண்புரை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டதாக  சி.ஆர்.சி நிபுணர்கள் கூறுகின்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரில் “கொழுப்பு மனிதன்” என்று அழைக்கப்படும் இரண்டாவது குண்டை அமெரிக்கா வீசியது. இதில் 74,000 பேர் கொல்லப்பட்டனர். 2016-ஆம் ஆண்டு பாரக் ஒபாமா தான் ஹிரோஷிமாவுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஆவார். ஆனால், அவர் தாக்குதலுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை, ஆனால் தப்பிப்பிழைத்தவர்களைத் தழுவி அணு ஆயுதங்கள் இல்லாத உலகிற்கு அழைப்பு விடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது.