செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கோவிந்தன், கன்னியப்பன், சங்கர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் மபா.நந்தன், க.புருஷோத்தமன், பரணிவர்மன், ஐயப்பன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகி வா.பிரமிளா ஆகியோர் மருந்தை வழங்கினர்.