tamilnadu

பறிமுதல் செய்த வாகனங்களை உடனே விடுவிக்க வேண்டும் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மே 23 - ஊரடங்கு காலத்தில் பறி முதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை விரை வாக விடுவிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன், செயலாளர் க. புருஷோத்தமன் ஆகியோர்  மாவட்ட கண்காணிப்பாள ரிடம் கொடுத்துள்ள மனு வில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் தடுக்க 144 பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைமீறிய இருசக்கர  வாகனங்கள் காவல்துறை யால் பறிமுதல் செய்யப் பட்டு வருகிறது. அதேசம யம், உறுதிமொழி அளிப்ப தன் அடிப்படையில் வாக னங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரு கின்றன.  

தற்போது, நாளொன்  றுக்கு 10 வாகனங்கள் மட் டுமே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழக அரசு, ஊர டங்கு தளர்வுகள் அறி வித்துள்ள நிலையில், ஊர கப் பகுதிகளிலும் நகர்ப்புறங்களிலும் பலர் கட்டுமான பணிகள், தனி யார் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வாகனங்கள் இல்லாததால் பலர் வேலைக்குச் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழை எளிய மக்க ளின் வாழ்வாதாரம் பாது காத்திட பறிமுதல் செய்த  வாகனங்களை உரியவர்க ளிடம் விரைவாக ஒப்ப டைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.