குட்கா பறிமுதல்
வேலூர், மே 3-ஆம்பூர் காவல்துறையினர் வாகன சோதனையில், மினி லாரியை சோதனை செய்தனர். அதில், ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா இருப்பதை கண்டனர். அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், சேலம் நகரை சேர்ந்த ஐந்து பேர்களையும், கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். ஆம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் கைது
வேலூர், மே 3-குடியாத்தம் சித்தூர்கேட், காதர்பேட்டையைச் சேர்ந்தவர் இலியாஸ்பாஷா (45). பரோட்டோ மாஸ்டரான இவருக்கு, திருமணமாகி 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் தன் வீட்டருகே வசிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு இலியாஸ்பாஷா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, இலியாஸ்பாஷாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைக்காவலுக்கு அனுப்பினர்.