tamilnadu

பண்ணையில் தீ :   2 ஆயிரம் கோழிகள் கருகின

வேலூர், ஜூன் 4-வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னமலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன்கள் சந்திரசேகர், பாஸ்கர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப் பண்ணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோழிப் பண்ணையில் இருந்த 3 கொட்டகைகளில் ஒரு கொட்டகை தீப் பிடித்தது. இதைக் கண்ட அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மற்ற இடங்களுக்கும் பரவியது.இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்பூர் தீயணைப்பு நிலைய குழுவினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசமானது. மேலும், அங்கிருந்த சுமார் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி இறந்து போயின. இதுகுறித்த புகாரின் பேரில், உமர்ஆபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.