விழுப்புரம் அருகே கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விசவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே கோண்டூரில் சேகர் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். சேகரின் மளிகை கடையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐயப்பன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் சென்றுள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து விசவாயு தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.