திருப்பூர், ஆக. 20– திருப்பூரில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக பெரிய ஊராட்சிகளையும், ஊராட்சி ஒன்றியங்களையும் பிரித்திட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட் டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும், கிராமப் புற நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்ட ஏனைய புதிய திட்டங் களை செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பொறியியல் பிரிவு உள்ளடக்கிய தனி ஊழியர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்துக்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.செந்தில் குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாவட்டச் செயலாளர் ச.முருகதாஸ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத் தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் தர்ணா போராட்ட சிறப்புரை ஆற்றினார். இதில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி அலுவலர்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் எம்.கண் ணன் நன்றி கூறினார்.