tamilnadu

img

1428 பசலிக்கான வருவாய் தீர்வாயம் துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் 1428 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் திங்களன்று துவங்கியது. சின்ன சேலம் வட்டத்தில் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 281 மனுக்களை ஆட்சியர் பெற்றார். இதில் பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனை ஒப்படை மனு, குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மனுக்கள்  வழங்கப்பட்டன. இப்பணியின்போது சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 162 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார். மேலும் விடுமுறை நாட்கள் தவிர இம்மாதம் 13 ஆம் தேதி வரை இந்த வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.