திருவில்லிபுத்தூர், மே 16- கொரோனா பரவலையொட்டி தமிழ கத்தில் குடிமக்கள் நலன் முக்கியமா? குடி மகன்களின் பணம் முக்கியமா? எனக் கேள்வி யெழுப்பினால் தமிழக அரசு சொல்கிறது. மக்கள் நலன் முக்கியமல்ல. குடிமகன் களின் பணம் தான் முக்கியம் என்று. திருவில்லிபுத்தூர் கோவிந்த நகரில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான கேண்டினில் டாஸ்மாக் பிரிவு சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து தனி மனித இடைவெளியின்றி முன்னாள் ராணுவவீரர் கள், தற்போது பாணியாற்றி வருபவர்கள் கேண்டின் முன்பு திரண்டனர். மூச்சுத்திண றும் அளவிற்கு நின்றிருந்த கூட்டத்தினர் முண்டியடித்துக்கொண்டு டாஸ்மாக் வாங்க முன்னேறிச்சென்றனர். கேண்டின் பணி யாளர்கள் டோக்கன் வழங்க முயற்சித்த னர். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அங்கும் திருவிழா கூட்டம். இந்தக் கேண் டீன் மூலம் 7 ஆயிரம் பயனாளிகள் பல னடைகின்றனர்.