திருவள்ளூர், ஆக. 26 - பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக புதனன்று (ஆக.26) பொன்னேரி கோட்டாச்சியரிடம் விவசாயி கள் மனு அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், பொன்னேரி அருகில் உள்ள காட்டாவூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் செயலர் பாஸ்கரன் மற்றும் உதவியாளர் ஆகியோர் கடந்த பல ஆண்டு களாக முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உறவி னர்கள் மற்றும் சிலருக்கு வங்கி விதிமுறைகளை மீறி கடன் அளித்து, அதிலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை கமிஷனாக பெறுகின்ற னர். இதனை மறைக்க செயலர் பாஸ்கரன் பாரத ஸ்டேட் வங்கி பொன்னேரி கிளையில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற விண்ணப்பித்துள்ள தாக தெரிகிறது என்று அவர்கள் கூறினர். பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களிலும் அரசு பணத்தை முறைகேடு கையாடல் செய்துள்ளது, வெள்ள நிவாரணம், பயிர்க் காப்பீடு, பயிர்க் கடன், நகைக் கடன் வழங்குவதில் முறைகேடு போன்றவைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.