tamilnadu

img

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திடீர் அறிவிப்பால் மக்கள் அவதி

சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்  ஏழை எளியை மக்கள் அனைவ ருக்கும் சொந்த வீடு மற்றும் வீட்டு மனை வழங்கப்பட வேண்டும் என்ற  உயரிய நோக்கில் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் தற்போது தனி யார் வீட்டுமனை விற்பனை நிறு வனங்களுக்கு நிகராக வீட்டு வசதி வாரியமும் மனைகளை, அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்து வருகிறது. அதே வேளையில் ஒதுக்கீடு செய்த மனைகளுக்கு தவணை செலுத்த முடியாதவர்களிடம் 12  விழுக்காடு வட்டியுடன், 15  விழுக்காடு கூட்டு வட்டி கணக்கிட்டு  வசூலிக்கப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தவணைகளை செலுத்த இயலாத ஏழை எளிய மக்களுக்கு வட்டி சலுகை அளிக்கப்பட்டது. அதன்படி ஒன்று முதல் மூன்று தவணையில் மணைக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகையை  கட்டி விற்பனை பத்திரம் வாங்கு பவருக்கு கூட்டு வட்டி இல்லை என்றும், விலை வித்தியாசத்தில் 7 மாதத்திற்கு சலுகை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதே நடைமுறையை கடந்த 2015 - 2016  ஆண்டுகளில் முதல்வ ராக இருந்த ஜெயலலிதாவும் பின்பற்றினார். இதனால் பல ஆயி ரம் பேர் பயனடைந்தனர். ஆனால் கடந்த ஜூன் 2019இல் வந்த அரசா ணையில் ஒரே தவணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 9 மாதத்திற்குள் ஒரு தவணை  பணம் கட்டி இருந்தாலும் இந்த  சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஒன்று அல்லது இரண்டு தவ ணைகளை கட்டியிருப்பார்கள். தற்போது வீட்டு வசதி வாரியம் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் தவணையை கட்டினால் வட்டி சலுகை கிடைக்கும் என்று விளம்ப ரப்படுத்தியுள்ளது. இதையடுத்து பணம் செலுத்த போனால், நீங்கள்  கடந்த ஜூலை மாதம் ஒரு தவணை  செலுத்தியுள்ளீர்கள். ஆகையால் உங்களுக்கு இந்த சலுகை கிடை யாது என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதனால் மொத்த மாக பணம் செலுத்த வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே பழைய முறைப்படி ஒன்றுக்கு மேல்  தவணை கட்டியிருந்தாலும் வட்டி சலுகை அளிக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.