tamilnadu

img

மேட்டூர் அணை பாசனத்துக்கு திறப்பு

மேட்டூர்,அக்.30- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்துவிடப்படுவதால் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இத னால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு  25,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கி றது. அணை முழுமையாக நிரம்பியுள்ள தால், அந்த தண்ணீர் அப்படியே காவிரி  டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப் பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக வினா டிக்கு 2,500 கன அடியும், நீர்மின் நிலையம்  வழியாக 22,500 கனஅடியும் கிழக்கு, மேற்கு  கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடி யாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டிஎம்சி யாகவும் இருந்தது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு  அவ்வப்போது அதிகரிப்பதும், சரிவது மாக உள்ளது. அருவியில் தண்ணீர் அதிகள வில் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை நீடிக்கிறது.