tamilnadu

img

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

சேலம், மே 21 -சேலம்-சென்னை 8 வழிச் சாலையை அமைத்தே தீருவோம் என பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமியை கண்டித்து சேலத்தில் விவ சாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று சேலம் ஓமலூர்விமான நிலையத்தில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம்- சென்னை 8 வழிச்சாலை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், புதிய சாலைகள் அமைப்பது என்பது மக்களின் நன்மைக்காக செயல்படுத்தப் படுகிறது. விபத்து களைத் தவிர்ப்பது மற்றும் நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தியே இந்த 8 வழிச் சாலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 7 சதவிகித விவ சாயிகள்தான் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகவே இந்தச் சாலை கட்டாயம் அமைக்கப் படும் என்றார்.தமிழக முதல்வரின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, செவ்வாயன்று சேலம் அயோத்தியாப் பட்டணத்தை அடுத்துள்ள ராமலிங்கபுரத்தில் எட்டுவழிச் சாலை திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயி கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்தும், அவர் கூறிய எட்டுவழிச் சாலை சம்பந்தமான கருத்துகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங் களையும் எழுப்பினர்.