tamilnadu

img

அரையப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட 500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்தூண்

கொடைக்கானல் மலைப்பகுதியில் காலப்போக்கில் புதைந்து போனதாகக் கூறப்படும் அரையப்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நுழைவுவாயிற் தூணும் அடுக்கம் கிராமத்திலுள்ள கற்தூணும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை தொல்லியல்துறையினர் உறுதி செய்துள்ளனர். கொடைக்கானல் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, அடுக்கம், பேத்துப்பாறை, பூம்பாறை, செண்பகனூர் பைரவர் கோயில் பகுதிகளில் ஆதிமனிதர்கள், பூர்வ குடிமக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. அடுக்கம் கிராம வனப்பகுதிக்குள், காலப்போக்கில் புதையுண்ட அரையபட்டி கிராமம் சமீபத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் குழுவால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்த கிராமம் தங்கள் மூதாதையர் வாழ்ந்த கிராமம் என்று கூறி அங்கிருந்த நடுகல்லை எடுத்து வந்து அடுக்கம் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படும் அந்த தூணை ஆய்வு செய்த தொல்லியல்துறை அதிகாரிகள், அரையப்பட்டி கிராமத்தின் கற்தூணும், அடுக்கம் கிராமத்தின் தூணும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.