மும்பை:
பிரபல பாலிவுட் ‘வில்லன்’ நடிகரான சோனுசூட், மும்பையில் தவிக்கும் பல்வேறு மாநில புலம்பெயர் தொழிலாளர்களை, தனது சொந்த செலவில் அவர்களின் ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். தன்னலமற்ற அவரின் இந்தசேவை, தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்ட்ராவின் சயான் கோலிவாடா பகுதியில் தவித்த தமிழக தொழிலாளர்களுக்கும் அவர்உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இங்கு சுமார் 180 தொழிலாளர்கள் தவிப்பதை அறிந்த சோனு சூட், முதலில் அவர்களைவிமானம் மூலமாக தமிழகம் அனுப்ப முயற்சி மேற்கொண் டுள்ளார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்படவே, தற்போதுஅந்த 180 பேரையும் பேருந்துகள் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.முதல் பேருந்து வடலா டிடி பகுதியில் வெள்ளிக்கிழமையன்று புறப்பட்டது. அதனை நடிகர் சோனு சூட் தேங்காய்உடைத்து வழியனுப்ப, தமிழ்ப் பெண்கள் சோனு சூட்டிற்கு ஆரத்தி எடுத்து தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர். சோனு சூட்டும், ‘பத்திரமாக ஊருக்குச் சென்றுவாருங்கள்’ என்று அவர்களுக்கு வாழ்த்து கூறி வழியனுப்பிவைத்துள்ளார்.