tamilnadu

img

விளையாட்டுக்கதிர்- மல்யுத்த நம்பிக்கைச் சுடர்!

ஆசிய மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் அது. தான் எதிர்கொள்ளப் போவது ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மூத்த வீராங்கனை என்றுதும் பயமே அறியாத அந்த இளம் கன்று, களத்தில் துள்ளி குதித்தது. காரணம், இதுபோன்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். காலம் கனிந்தது. அனுபவ வீராங்கனை என்பதை ஆரம்பத்திலேயே நிரூபித்துக் காட்டினார் சாக்ஷி மாலிக். அசத்தலாக விளையாடியதால் அனைவரது பார்வையும் அவர்மீதே இருந்தது. வெற்றியை நோக்கி பயணித்தபோதிலும் கடைசி நிமிட சறுக்கல் சாக்ஷி மாலிக்கின் காலை வாரி விட்டது. “மல்யுத்த விளையாட்டு உலகில் தந்தையால் சாதிக்க முடியாமல் போனதை 18 வயதில் மகள் சாதித்திருப்பது குடும்பத்தில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது”.
பயணம் சுலபமல்ல...
அரியானா மாநிலம் சோனோபட் மாவட்டத்தில் மல்யுத்த குடும்பத்தில் பிறந்த சோனம் மாலிக்கின் இந்த வெற்றிப் பயணம் அவ்வளவு சுலபமானது இல்லை.
வெற்றிப்படிகள்...
குழந்தை பருவத்தில் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடித்து ஐபிஎஸ் அதிகாரி சுமன் மஞ்சரி கையால் பரிசு பெற்றது சோனத்தை மேலும் ஊக்கப்படுத்தியது. அதன் பிறகு நடந்த தேசிய அளவிலான போட்டிகள் வரை சோனம் தான் முதலிடம். சோனம் மாலிக், வெற்றிப் படிகளை ஏற தொடங்கிய கும் தன்னைவிட அனுபவத்திலும் வயதிலும் மூத்த மல்யுத்த வீரர்களை தோற்கடித்திருக்கிறார். மல்யுத்தத்தில் இருமுறை ‘பாரத் கேசரி’ பட்டத்தையும் வென்றார்.
கடினமான நேரங்கள்...
தன்னைவிட உருவத்திலும் எடையிலும் மிகவும் பலசாலியான வீரர்களை எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் எதிர்கொள்வ தில் கில்லாடி. ஒவ்வொரு முறையும் ஆடுகளத்தில் மல்லுகட்டும் பொழுது 100 சதவீதம் கடினமாக எதிர் கொள்வதில் வல்லவர். 12 வயதில் மல்யுத்த பக்கம் கால் வைத்த சோனம் மாலிக், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2017) ஆசிய கேடட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் உலக கேடட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இரண்டு பதக்கங்களை குவித்தார். அதனைத் தொடர்ந்து விளையாடிய மற்றொரு போட்டி அவரது எதிர்காலத் தையே கேள்விக்குறியாகி விட்டது. அவரது வலது கை இயக்கவும் அசைக்கவும் முடியாமல் போனது. ஆரம்பத்தில் இது சிறிய காயம் என்று அவரது தந்தை ராஜேந்தர் மாலிக், பயிற்சியாளர் அமீர்கான் இருவரும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு நாட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக கை செயலிழந்து கொண்டு வருவதை உணர்ந்தனர். ஒரு கட்டத்தில் முற்றிலுமாக அசைக்க முடியாமல் போனது. மருத்துவ நிபுணரிடம் பரிசோதனை செய்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. இனிமேல் சோனம் மாலிக் மல்யுத்தத்தை மறந்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டார். “நான் தவறு செய்து விட்டேன் என்று தந்தை ராஜேந்தர் மீண்டும் வருந்திய நேரம் அது”. ஆனால், சுமார் 10 மாத காலம் தொடர் சிகிச்சை, பயிற்சி சோனம் மாலிக்கிற்கு நம்பிக்கை கொடுத்தது. கைகளுக்கு பதிலாக கால்களால் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். மல்யுத்த போட்டிக்கு கைகளை விட காலின் பங்கு மிகப் பெரியது. எந்த சூழ்நிலையிலும் சோசனம் மாலிக் களத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. 10 மாத சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டார்.
பயில்வான்...
டெல்லியின் புகழ்பெற்ற மல்யுத்த வீரரும் சிறந்த பயிற்சியாளரான சாந்தி ராம் நடத்திவந்த பயிற்சிக் கூடத்தில் மல்யுத்தம் கற்றுக்கொண்ட  ராஜேந்தர் மாலிக், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் தேசிய தேசிய போட்டிகளில் விளையாடும் முன்பே விளையாட்டுக்கு முழுக்கு போட வைத்தது. நாட்டுக்காக விளையாட முடியவில்லையே என்ற பெருத்த வருத்தம் அவரை வாட்டிக்கொண்டே இருந்தது.
மகனுடன் டென்னிஸ் விளையாடி வந்த மகளை விளையாட்டுத் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்கு பொருத்தமான விளையாட்டு எது என்பதை  தேடிக் கொண்டிருந்தார் ராஜேந்தர் மாலிக். அது மல்யுத்தமாக மட்டும் இருக்கக்கூடாது என இருந்தார். ஹரியானாவின் மதீனா கிராமத்தில் ‘ராஜ் பயில்வான்’ என அழைக்கப்பட்ட ராஜேந்தர் மாலிக், தனது நண்பர் அஜ்மீர் மாலிக்கை தினமும் சந்திப்பது வழக்கம். மல்யுத்த  பயிற்சி பள்ளியை நடத்தி வந்த அவரது கடின உழைப்பு,  அர்ப்பணிப்பு, முழுக்க முழுக்க ராணுவ ஒழுங்கு முறையிலான பயிற்சியும் மகளின் எதிர்காலம் மல்யுத்தமாக இருந்தால் என்ன? என யோசிக்க வைத்தது. இருவரும் ஒரே பள்ளியில் மல்யுத்த பயிற்சி எடுத்தவர்கள். அஜ்மீர் நடத்தி வந்த அந்தப் பயிற்சி பள்ளியில் முழுக்க முழுக்க ஆண் குழந்தைகள் மட்டுமே பயிற்சி பெற்றனர். சோனம் மாலிக் மட்டுமே பெண் குழந்தை. ஆனாலும் ஆண் குழந்தைகளைப் போலவே சோனமுக்கும் பயிற்சி கொடுத்தார்.
பீனிக்ஸ் பாவை!
வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் மீண்டும் களம் இறங்குவார் என்ற நம்பிக்கையை அனைவரும் இழந்தனர். ஆனால், சோனம் ஒருபோதும் நம்பிக்கையை இழக்க வில்லை. உடற்தகுதி பெற கடுமையாக உழைத்தார். “இனி இழக்க ஒன்றுமில்லை. அனைத்து வகையிலும் போராட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று சர்க்கரை ஆலை தொழிலாளியான தந்தையின் வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்தது. “காயங்கள் என்பது மல்யுத்த வீரர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அதை பார்த்து எப்போதும் பயப்படக் கூடாது” என பயிற்சியாளர் சொன்னதும் நினைவில் வைத்துக் கொண்டார். தன்னை எதிர்த்து மல்லுக்கட்டும் வீராங்கனை அனுபவத்தில் மூத்தவர். அவரை முதன்முதலாக எதிர் கொள்கிறோம் என்று பயமே இல்லை. சிறிதும் இடைவெளியில்லாமல் தாக்கி நிலைகுலையச் செய்தார். இந்த வெற்றி இளம் வீராங்கனையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. “கைகள் செயல் இழந்த நிலையிலும் விடா முயற்சியால் மல்யுத்த களத்தில் சாக்ஷியை வீழ்த்தியதன் மூலம் கிடைத்திருக்கும் அனுபவம் ஒலிம்பிக்கில் குறைந்த பட்சம் பதக்கத்துடன் திரும்பி வருவேன்” என்று கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார் சோனம் மாலிக். என் மகள் ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வெல்வதே காண வேண்டும். அதுவே எனது நீண்டநாள் லட்சியம்” என்று தந்தை ராஜேந்தர் மாலிக் மட்டுமல்ல நாடும் அதைதான் எதிர்பார்க்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் பெண்கள் அணியில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்று அனைவருக்கும் புதிய நம்பிக்கையை அளித்திருக்கும் அவரை அனைவரும் வாழ்த்துவோம்!