வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
மதுரை, செப்.1- மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் - தனபாக்கியம் ஆகியோ ரது மகன் ரூபன்ராஜூக்கும், உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த அக்னி- செல்வி என்பவரது மகள் பிரியதர்ஷி னிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடை பெற்றது. தொடக்கத்தில் 300 பவுன் நகை வரதட்ச ணையாக மணமகன் வீட்டார் கேட்ட போது, 150 பவுன் நகைகள் மட்டுமே போடப்பட்ட தாக கூறப்படுகிறது. இதனால், ரூபன்ராஜூக் கும், பிரியதர்ஷினிக்கும் இடையே கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. கடந்த மே மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, இரு வரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கண வருக்கு வேறு திருமணம் செய்து வைப்பதாக கிடைத்த தகவலால், கணவரை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி சனிக் கிழமை மாமனார், மாமியாரை சந்தித்து பேச பிரியதர்ஷினி சென்றுள்ளார். இந்நிலையில், அதிகமான மருந்து மாத்தி ரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று அரசு இராஜாஜி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி யதாகவும், தன்னுடைய மகளை தற்கொ லைக்கு தூண்டிய பிரியதர்ஷினியின் கண வர் ரூபன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தி னரை கைது செய்ய வேண்டும் என்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உறவி னர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செல்லூர் காவல் நிலை யத்தில் பெற்றோர்கள் அக்னி - செல்வி அளித்த புகாரின் பேரில், கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து காவல்துறை தரப்பில் கூறு கையில், ஞாயிறன்று பெண்ணின் வீட்டார் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்றும், எனவே பெண்ணின் கண வர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்ட னர். வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்ணின் உடலை பெற்றுச் சென்றனர். மாவட்ட வருவாய் துறை அதிகாரி (டிஆர்ஓ) விசாரணைக்கு பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.