tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை: கல்லணையில் நீர் திறப்பு நிறுத்தம்

தஞ்சாவூர், நவ.11 - காவிரி டெல்டா மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை பரவலாக பெய்து  வருவதால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கல்லணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் காவிரி டெல்டா மாவட்டங் களில் பரவலாக அவ்வப்போது மழை  பெய்து வந்தது. இந்நிலையில் வங்கக்கட லில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங் களில் வியாழன் முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை மழை பெய்து வந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வெள்ளிக்கிழமை காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து  வந்ததால், பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக் கிழமை ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந் தது. மேலும், மழையின் காரணமாக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய நகர்ப்புறங்களில் பொதுமக்கள் கூட்ட மின்றி சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டன. மழையினால் வாகனப் போக்கு வரத்து குறைவாகவே இருந்தது.

பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீர் ஆறு கள் மற்றும் பாசன வாய்க்கால், வடி கால்கள் வழியாக செல்கிறது. ஏற்கெனவே மேட்டூரிலிருந்து வரும் பாச னத் தண்ணீர் சென்றால், அதிக பாதிப்பு  ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழ மை காலை முதல் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால் வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மேட்டூர் அணையி லிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 16  ஆயிரம் கனஅடி அளவு கல்லணை  வந்தது. இந்த தண்ணீர் அப்படியே  கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படு கிறது. மழையின் காரணமாக, தஞ்சா வூர் மாவட்டத்தில் பல இடங்களில் சம்பா சாகுபடி நெற்பயிரை மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் இளம் நெற்பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.