உசிலம்பட்டி, ஜன.30- மருத்துவம் படிக்க தனியார் கல்லூரியில் ‘சீட்’ கிடைத்தும், கட்டணம் செலுத்த பணம் இல்லா மல் உசிலம்பட்டி மாணவியின் மருத்துவராகும் கனவு கேள்விகுறி யாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சன்னாசி-மயில்தாய் தம்பதியினர். இவருக்கு நான்கு பெண் குழந் தைகள். மூத்த மகள் தங்கபேச்சி. இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்று கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியைத் தொடர முடியவில்லை. அதன் பிறகு தாமதமாகதான் தமிழக அரசு கல்விக் கட்டணத்தை ஏற்பதாக தெரிவித்தது. இதனால் தங்க பேச்சியின் மருத்துவர் கனவு கடந்த ஆண்டு நிறைவேறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் தேர்வு எழுதி 256 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாகக் கூறியுள்ளது. ஆனால் தங்கும் விடுதி உட்பட இதர செல வினங்களை செலுத்துவதற்கு தங்க பேச்சியின் பெற்றோருக்கு எந்த வரு மானமும் இல்லை. அதனால், இந்த ஆண்டும் இந்த ஏழை மாணவியின் மருத்துவராகும் கனவு கலைந்துபோகுமோ? என்று அவரது பெற்றோர் கவலையடைந்து உள்ளனர்.
மாணவி தங்கபேச்சி கூறுகை யில், ‘‘என்னை, எனது தந்தை சன்னாசி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் வேலைக்கு அனுப்பா மல் பள்ளியில் படிக்க வைத்தார். நாங்கள் நான்கு பேர் பெண் குழந்தை கள். என்னை தனியார் கல்லூரியில் விடுதி கட்டணம் உள்ளிட்ட இதர செலவினங்களை செலுத்தி படிக்க வைக்கும் சூழல் இல்லை” என்றார். மாணவியின் தந்தை சன்னாசி கூறுகையில், நாங்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். எனக்கு தினக்கூலி ரூ.350. எனது மனை விக்கு தினக்கூலி ரூ.150. பூ பறிப் பது, களையெடுப்பு பணிகளைச் செய்துவருகிறோம். விடுமுறை தினங்களில் எனது மகள்கள் விவசாய வேலைக்கு வருவர். அவர்களுக்கு மணிக்கு கூலி நிர்ணயிக்கப்படும். ரூ.30 முதல் ரூ.60 வரை கிடைக்கும். எனது மகளின் உணவுச்செலவு, தங்கும் இடத்திற்கான செலவு, உடைக்கான செலவை செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
தங்கபேச்சியையும் அவரது குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.பி.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.ரவி, கிளைச் செயலாளர் துரைராஜ் சந்தித்து குடும்பச் சூழல் குறித்து கேட்டறிந்தனர். மருத்துவ ராவதற்கு தேவையான உதவிகளை பெற்றுத்தர அரசிடம் கோரிக்கை வைப்பதாக உறுதியளித்தனர்.