குஜராத்தை சேர்ந்த மனித உரிமைப் போராளியும் 2022 இனப்படு கொலைகளுக்குப் பின்னர் பல முஸ்லீம் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்தவருமான டீஸ்டா செதல்வாத் மும்பையில் குஜராத் காவல்துறையினரால் கைது செய் யப்பட்டுள்ளார். குஜராத் இனப்படுகொலையின்போது கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த ஒரு வழக்கை உச்சநீதி மன் றம் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில் குறிப்பி டப்பட்ட ஒரு கூற்றை அடிப்படையாக வைத்து டீஸ்டாவின் கைது அரங்கேறியுள்ளது. மத வாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல் படும் ஆட்சி மேலும் மேலும் எதேச்சதிகாரப் பாதையில் செல்கிறது எனும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 23வது மாநாட்டின் மதிப்பீடு உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை டீஸ்டா வின் கைது நிரூபிக்கிறது.
உச்சநீதிமன்றம் கூறியது முறையா?
2002 குஜராத் இனப்படுகொலைச் சம்ப வங்களின் ஒரு பகுதியாக பிப்ரவரி 28ம் தேதி ஒரு கும்பல் அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடி யிருப்பு பகுதியை தாக்கியது. அங்குதான் காங்கி ரஸ் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான இஷான் ஜாஃப்ரி வீடும் உள்ளது. யாரையும் தாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வெளியில் வந்த அவரை கும்பல் குரூர மாக தாக்கியது. அவரது கைகளும் கால்களும் வெட்டப்பட்டன. அவர் எரித்து கொல்லப்பட் டார் அவரது மனைவி கண்முன்பே! அந்த கல வரத்தில் ஓரிரு மணி நேரத்தில் ஜாஃபரி யின் சகோதரர்கள் உட்பட 69பேர் கொல்லப் பட்டனர். இந்த கொடும் செயலை குஜராத் அர சாங்கம் சரியாக விசாரிக்கவில்லை என்பதால் உச்சநீதிமன்றம் விசேட புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழுவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.கே.ராகவன் தலைமையேற்றார். இந்த படுகொலைகளில் அன்றைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் பங்கு குறித்தும் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண் டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். பல முடிவு களை முன்வைத்த ராகவன் குழு இந்த கல வரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என ஆணித்தரமாக கூறியது. இதனை எதிர்த்து ஜாகியா நீதிமன்றம் நாடினார். கீழமை நீதி மன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவையும் ஜாகியாவின் கோரிக்கையை நிராகரித்தன. எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றத்தில் டீஸ்டாவும் ஒரு மனுதார ராக இணைந்தார். வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, ஜாகியாவின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளு படி செய்தது. அந்த தீர்ப்பில் கீழ்க்கண்ட கருத்து களையும் முன்வைத்தது.
“மனுதாரர்கள் உள்நோக்கத்துடன்தான் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். பல ஆண்டு களாக இந்த பிரச்சனையை கொந்தளிப்பு நிலை யிலேயே வைத்திருக்க முயன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்; சட்டப்படி அவர்கள் மீது நவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”. நீதிமன்றத்தின் இந்த கூற்றுதான் காவல்துறையினர் உடனடியாக டீஸ்டாவை கைது செய்ய வழி வகுத்தது. கிரிமினல் சதி உட்பட 4 கடுமையான பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் முன் னாள் குஜராத் காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீகுமா ரும் சஞ்சீவ் பட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற அமர்வு இத்தகைய தீர்ப்பை கொடுத்த அதே நேரத்தில்தான் தலைமை நீதி பதி ரமணா அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்: “நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற விடு தலை, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை காக்க குடிமக்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பணியாற்ற வேண்டும்”. என்னே நகை முரண்? ஒருபுறம் தலைமை நீதிபதி ஜனநாயகத்தை காக்க முன்வருமாறு மக்களை வேண்டுகிறார். இன்னொரு புறம் அவ ரது சக நீதிபதிகள் குஜராத் கலவரத்தில் மோடி யின் பங்கு குறித்து விசாரிக்கக் கோரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு அளித்து கைதுகளுக்கு வழி வகுக்கின்றனர். இப்படி டீஸ்டாவின் பெயரை தீர்ப்பில் குறிப் பிட்டு தண்டிக்க வேண்டும் எனக் கூறுவது சரி அல்ல என பல முன்னாள் நீதிபதிகளும் வழக்க றிஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகத்தான போராளி டீஸ்டா
குஜராத் இனப்படுகொலை குறித்த கண்ட னங்களை பலர் எழுப்பினாலும் குஜராத்துக்குள் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மிகச் சிலர்தான்! ஏனெனில் குஜராத்தை இந்துத் துவா கருத்துகள் மிக ஆழமாக ஆட்கொண்டி ருந்தன. முஸ்லீம் சமூகம் மீது பொதுவான கோபமும் வெறுப்பும் அந்த சமூகத்தில் ஆழமாக புரையோடியிருந்தது. கோத்ரா நிகழ்வு இந்த வெறுப்பை பல மடங்கு அதிகரித்தது. எனவே அதற்கு எதிராக குரல் எழுப்ப அசாத்திய தைரி யம் தேவையாக இருந்தது. இந்த படுகொலை கள் பயங்கரமானவை என எண்ணியவர்கள் கூட அதனை வெளியே சொல்ல முன்வர வில்லை. இந்த சூழலில்தான் குஜராத் மண்ணில் பிறந்து வளர்ந்த டீட்ஸா துணிச்சலாக எதிர் வினையாற்றினார். இந்த தைரியம் அவரது குடும்ப பின்னணியில் இருந்து வந்தது எனில் மிகை அல்ல. அவரது தாத்தா எம்.சி.செதல் வாத் இந்தியாவின் முதல் அட்டர்னி ஜென ரலாக பணியாற்றியவர். அவரது கொள்ளுத் தாத்தா சிமன்லால் ஹரிலால் செதல்வாத், ஜாலி யன்வாலாபாக் படுகொலைகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம் பெற்ற ஒரே இந்தியர்! அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் ஒரு இஸ்லாமியர். சமூக செயற்பாட்டாளர்.
டீஸ்டா மற்றும் அவரது கணவரின் உறுதி யான செயல்பாடுகள் காரணமாகவே குல்பர்கா குடியுருப்பு மற்றும் நரோடா பாட்டியா படு கொலைகளை அரங்கேற்றிய கொடியவர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக நரோடா பாட்டியா கொலை வழக்கில் அன்றைய பெண் கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மாயா கொட்னானி என்பவர் சிறைத்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அமைச்சர் மட்டுமல்ல; மருத்துவரும் கூட! எனி னும் படுகொலைகளில் தீவிர பங்கெடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டார். மனித உயிர்களைக் காப்பாற்ற போதிக்கப்படும் மருத்துவக் கல்வி கூட மதவெறி முன்பு மண்டியிட்டு விட்டதை மாயாகோட்னானியின் குற்றங்கள் உணர்த்தின. அன்றைய முதல்வர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் பிடி மானத்தையும் மீறி பல தண்டனைகளை பெற்றுத்தந்த டீஸ்டா மீது மிகப்பெரிய ஆத்தி ரம் சங் பரிவாரத்துக்கு இருந்தது. உச்ச நீதிமன் றத்தின் தீர்ப்பு அந்த ஆத்திரத்தை நிறை வேற்றிக்கொள்ள வாய்ப்பை உருவாக்கி விட்டது. ஆட்சியாளர்களை இழிவுபடுத்துகின்றனர் எனக்கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறும் இதே உச்சநீதிமன்றம்தான் 2004ம் ஆண்டு ஒரு வழக்கில் “குஜராத்தை ஆள்பவர்கள் நவீன நீரோக்கள்” எனவும் பெண்களும் குழந்தை களும் படுகொலை செய்யப்பட்ட பொழுது தமது முகத்தை வேறு திசையில் வைத்து கொண்ட னர் எனவும் குற்றம்சாட்டியது. பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட அமர்வு ஒத்த கருத்துடைய தீர்ப்பை வழங்கும் பொழுது அந்த தீர்ப்பை வடிவமைத்தது யார் என்பதையும் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த தீர்ப்பை எழுதியது யார் என்பது குறிப்பி டப்படவில்லை எனவும் இதேபோல்தான் அயோத்தி தீர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை எனவும் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். நீதித்துறையின் பின்னோக்கிய பயணம் கவலை தருவதாக பலரும் கூறியுள்ளனர்.
- அ.அன்வர் உசேன்