tamilnadu

img

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பாஜக முருகக் கடவுளையும் ஏமாற்றுகிறது

முருகனைச் சொல்லி பொய்ப்பிரச்சாரம்

அரிசி, பருப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல பொருட்களின் விலையை உயர்த்திவிட்டு, தற்போது மக்களையும், முருகக் கடவுளையும் சேர்த்து பாஜகவினர் ஏமாற்றுகின்றனர். கேஸ் சிலிண்டர் விலையை பாதியாக குறைப்போம் என வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த பாஜக, தற்போது அதன் விலையை ரூ.950வரை உயர்த்தியுள்ளது. மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை தானே மீறியுள்ளது. ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு காரணமே பாஜக அரசுதான். ஆனால், திருப்பரங்குன்றம் முருகனிடம் கோரிக்கை பட்டியலை வழங்குகிறார்களாம். முருகனா அரிசிக்கும் பருப்புக்கும் ஜி.எஸ்.டி வரியைப் போட்டார்? பழனியில் உள்ள முருகனா பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினார்? அவரா சுங்கச் சாவடி கட்டணத்தை 6 மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தச் சொன்னார்? அதானி-அம்பானி ஏகபோகம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் வசம் ஒப்படைத்துவிட்டனர். அவர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உரு வாக்கி விலையை உயர்த்தி வருகின்றனர்.

கல்வி நிதி நிறுத்தம்

தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2132 கோடியை தர மறுக்கிறது பாஜக அரசு.  தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டு, இந்தியை கட்டாயமாக்கினால் மட்டுமே நிதி தர முடியும் என நிர்ப்பந்தம் செய்கிறது.  ஆனால், தமிழகத்திற்கு வந்த அமித் ஷா, விலைவாசி உயர்ந்துவிட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கிறார். கல்விக்கு திமுக அரசு என்ன செய்துள்ளது என கேள்வியும் கேட்கிறார். ஆளுநர் தடை நடவடிக்கை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார். மாநில மக்களால் அதிகாரம் பெற்றுள்ள அரசின் மீது வன்முறை தாக்குதலை நடத்தி வருவதோடு, அதன் உரிமைகளை பறிக்கும் செயலை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

வகுப்புவாத அரசியல் கண்டனம்

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலால் 26 அப்பாவி சுற்றுலா பயணி கள் படுகொலை செய்யப்பட்டனர். பயங்கர வாதிகளில் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க வில்லை. மாறாக, புல்டோசரை வைத்து இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. எங்களின் உயிரைப் பாதுகாத்தது இஸ்லாமியர்கள்தான் என தப்பிய சுற்றுலா பயணிகளே கூறுகின்றனர். ஆனால், வகுப்புவாத வெறுப்பு அரசியலை பாஜக பரப்பி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கிறது. தமிழக அரசுக்கான கோரிக்கைகள் மாநிலத்தை ஆளும் திமுக அரசு, வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகளையும், நிலம் இல்லாதவர்களுக்கு நிலங்களையும் வழங்க வேண்டும். வேலைக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணிபுரிவோருக்கு குறைவான ஊதியத்தை வழங்கி வருகிறது. உழைப்புச் சுரண்டலை ஏற்க முடியாது. தேர்தல் வாக்குறுதிப்படி மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய  பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  தொழிலாளர்களுக்கான சட்டப்படியான உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். அருப்புக்கோட்டை பிரச்சாரக் கூட்டத்தில்  சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி உரையில் இருந்து.