தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் நேரிடையாக வந்து நலவாரிய மனுக்கள் அளித்திட அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.