சென்னை, அக்.21- நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்து கொண்டே இருந்தால், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரியான ஒரு வீரமிக்க போராட்டத்தை தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.க இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணியின் சார்பில் ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி யுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நீட் விலக்கை வலி யுறுத்தும் மாபெரும் கையெழுத்த இயக்கத்தை சனிக்கிழமையன்று (அக்.21) உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது; கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டோமோ, அதே உறுதியுடன், இன்றைக்கு இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி யுள்ளோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பித்துள் ளோம். இது தி.மு.க நடத்துகிற கையெ ழுத்து இயக்கம் என்றாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு நான் எச்சரிக்கை யாகவே சொல்கிறேன். கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். இதன் மூலம் 50 லட்சம் கையெழுத்து வாங்குகி றோம் என்றால், 50 லட்சம் பேனாக்கள் உயர்ந்து நிற்கிறது என்று அர்த்தம். தமிழ்நாட்டுடைய உரிமைகளுக்காக, நமது மாணவர்களின் கல்வி உரிமைக் காக – நீட் தேர்வு ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் உணர்ச்சி ஒட்டுமொத்தமாக நீட் தேர்வுக்கு எதிராக உள்ளது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நான் அதிமுகவுக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். அதிமுகவினரும் வாருங்கள் நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராடலாம் என்று நான் ஏற்கெனவே கூறியிருந் தேன். இப்போதும் அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுங்கள்.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொதுப்பிரச்சனைகளுக்கு, அனைத்து கட்சிகளும் இணைந்து தில்லிக்கு சென்று எப்படி கோரிக்கைகளை வைத் தோமோ, அதே போல நீட் ரத்துக்காக பெறப்படும் கையெழுத்துகளையும், நாம் எல்லோரும் சேர்ந்தே குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம். பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறப்ப தான் உங்களால எதுவும் பண்ண முடியல. இப்ப தான் கூட்டணி யில் இருந்து வெளியில வந்துட்டீங்க. இது ஏதோ திமுகவின் பிரச்சினைனு நினைக்க வேண்டாம், இது தமிழ் நாட்டின் பிரச்சனை. தமிழ்நாட்டு உரிமையைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு அதிமுக மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாட்டின் கல்வி உரி மையை பாதுகாக்க – தில்லிக்கு நம் கடிதங்கள் பறக்கட்டும். நீட் தேர்வை ஒழித்து – நம் கல்வி உரிமை காப்போம்” இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக மாணவர் அணி தலைவர்கள் சி.வி.எம்.பி .எழிலர சன், எழிலன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,கனிமொழிசோமு, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஊடகவியலாளர் செந்தில் வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.