tamilnadu

பறக்கும் அனல் காற்றால் தர்பூசணி வியாபாரம் அமோகம்

சென்னை,ஏப்.2- வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பத்தி லேயே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல், மே, ஜூன்  மாதங்க ளில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்க ளில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆண்டு தோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி,  இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த மாதமே அதிகரிக்க  தொடங்கியது. பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. மார்ச் 11 ஆம் தேதி 95 டிகிரியாக பதி வானது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வந்த  வெயில் அளவு கடந்த 16 ஆம் தேதி 101 டிகிரியாக பதிவானது.  தொடர்ந்து 29 ஆம் தேதி வரை 100 டிகிரிக்கு மேல் வெயில்  வாட்டி வதைத்தது.

அதற்குப்பிறகும், தமிழகம் முழுவதும் 3 நாட்கள் வெயிலின்  தாக்கம் 3 டிகிரி வரை கூடுதலாக சுட்டெரிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இந்த நிலையில் வேலூரில்  மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேலூர் உள்பட  7 நகரங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவானது.  வெயில் கோரத்தாண்டவத்தால் தேசிய நெடுஞ்சாலை களில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படு கின்றனர். வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில்  மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில்  புழுக்கம் அதிகரித்துள்ளது. வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் 2  மாதங்களுக்கு 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தும்  என்று கணிக்கப்பட்டுள்ளது.