tamilnadu

img

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர், மே 27-  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது இதையடுத்து கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம் ஆகியோர் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங் களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்து, நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.