tamilnadu

img

7 மையங்களில் நடை பயணம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை, மே 19- “அன்னமிட்ட கைகளை கிண்ணமேந்த விடுவதா சமூகநீதி” என்று கேட்டு நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் வியாழனன்று (மே 19) செய்தியாளர்களிடம் மாநில பொதுச்செயலாளர் அ.மலர்விழி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஏப்ரல் மாதம் 14 மற்றும் 19 தேதிகளில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினோம். சத்துணவு ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு அமைப்பாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகையாக 5 லட்ச ரூபாயும், சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் மானிய கோரிக்கையின் போது எந்த கோரிக்கை குறித்தும் அறிவிக்கப்படவில்லை.

நான்கு கட்ட போராட்டங்கள்

இதையடுத்து வியாழனன்று (மே 19) சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு வில் 4 கட்ட போராட்டங்களை நடத்த முடிவெ டுத்துள்ளோம். அதனடிப்படையில் ஜூன் 4ஆம்  தேதி முதல் 10ஆம் தேதி வரை ஓசூர், ராமநாத புரம், ராமேஸ்வரம், கோயம்புத்தூர், திருப்பத்தூர், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய 7 மையங்களில் இருந்து “அன்னமிட்ட கைகளை கிண்ணமேந்த விடுவதோ சமூகநீதி” என்று கேட்டு நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளோம். அன்று மாலை அனைத்து குழுக்களும் திருச்சியில் சங்கமித்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி  கோரிக்கை விளக்க மாநாடு நடத்த உள்ளோம்.

தலைநகரங்களில் பேரணி

இதையடுத்து ஜூலை 15 காமராஜர் பிறந்த  நாளன்று வாழ்வாதார உரிமையும், வரையறுக் கப்பட்ட ஊதியமும் கேட்டு மாவட்ட தலை நகரங்களில் பேரணி நடத்த உள்ளோம். அப்போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழக  முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் எங்களது கோரிக் கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது மாநிலத் தலைவர் ஆர்.கலா, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி, துணைத்  தலைவர் பே.பேயத்தேவன், ஆ.பெரியசாமி, மு.தமிழரசன், கே.அண்ணாதுரை, ஆர்.எம்.மஞ்சுளா ஆகியோர் உடன் இருந்தனர்.