tamilnadu

img

மெக்சிகோ, கனடா மீதான வரிகளை தற்காலிகமாக நிறுத்தியது அமெரிக்கா

ஒட்டாவா/மெக்சிகோ சிட்டி, பிப்.4 - மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி யாகும் பொருட்களுக்கு அமெரிக்க  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த 25 சதவீதமான வரியை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.  பிப்ரவரி 1 முதல் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்துஇந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மெக்சிகோ 
ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும் அமெரிக்கப் பொருட் களுக்கு வரி விதிப்பேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவுக்கு 10 சதவீத வரியும் விதிக்க டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.

வரி விதிப்பிற்கு ஒரு காரணமாக அமெரிக்கா உடனான மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளின் எல்லை வழியாக சட்டவிரோதமாக லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்குள் குடியேறி வருகிறார்கள் மற்றும் அந்த நாடுகளின் எல்லை வழியாக போதைப்பொருள், அமெரிக்காவிற்குள் வருகிறது. 


இதனை அந்நாடுகள் தடுக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் டிரம்ப் வரி விதிப்பதாக அறிவித்தவுடன் மெக்சிகோ ஜனாதிபதியும் கனடா பிரதமரும் டிரம்புடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்நிலையில் டிரம்ப் வரி விதிப்பதாக அறிவித்தவுடன் மெக்சிகோ ஜனாதிபதியும் கனடா பிரதமரும் டிரம்புடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இதனைத் தொடர்ந்து மெக்சிகோ - அமெரிக்க எல்லையில் 10,000 ராணுவ வீரர்களை நிலை நிறுத்தி ஆவணமற்ற மக்கள் எல்லை தாண்டுவதையும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கிளாடியா அறிவித்தார்.

கனடா பிரதமர் ட்ரூடோவும் அமெரிக்கா - கனடா எல்லையில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

  இதனைத்தொடர்ந்தே டிரம்ப் 30 நாட்களுக்கு வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். மீண்டும் அந்நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பார் என கூறப்படு கின்றது.