சென்னை,ஜன.10- தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் கால வரம்பின்றி ஒத்திவைக்க ப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித் தார். இதுதொடர்பாக சென்னை யில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக் கப்படுகிறது. எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டா லும், செய்முறைத் தேர்வுகள் நடை பெறும். மாணவர்களுக்கு ஏற்கெ னவே பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த தேர்வுக்கு தயாராவதற்காக விடப்பட்டுள்ள இந்த விடு முறையை மாணவர்கள் பயன்படு த்தி, நன்றாக படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசின் வழிக்காட்டு விதிமுறை களை மீறி கல்லூரிகளை திறந்து வகுப்பு நடத்தினால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.