புதுதில்லி,பிப்.9- கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 655 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை காவல்துறை செய்த என்கவுண்டர்களின் எண்ணிக்கை குறித்தும், என்கவுண்டர்கள் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்த வழக்குகள் குறித்தும் மக்களவையில் எழு த்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உள்துறை அமைச்சக இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதிலளிக்கை யில், தேசிய மனித உரிமைகள் ஆணை யத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31 ஆம் தேதி வரை 655 என்கவுண்டர்கள் நடந்துள்ளன. அதிகபட்ச மாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 191, உத்தரப்பிரதேசத்தில் 117 என்கவுண்டர்கள் நடந்துள்ளன. அசாமில் 50, ஜார்கண்டில் 49, ஒடிசாவில் 36, ஜம்மு- காஷ்மீரில் 35, மகாராஷ்டிராவில் 26, பீகாரில் 22, ஹரியானாவில் 15 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 என்கவுண்டர்கள் நடந்திருப்பதாகவும் தெலுங்கானா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசத்தில் 13 என்கவுண்டர்களும், ஆந்திரா, மேகாலயாவில் 9 என்கவுண்டர்களும், ராஜஸ்தான் மற்றும் தில்லியில் 8 என்கவுண்டர்களும் நடந்திருப்பதாகவும் உள்துறை இணையமைச்சர் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.