tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

மதுரை, பிப்.15-   நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் மதுரை மாநகராட்சி வார்டு களில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிப்ர வரி 15 செவ்வாய்க்கிழமையன்று மதுரையில் திமுக  இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண் டார். மதுரை முனிச்சாலை ஓபுளா  படித்துறை அருகே பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற  சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது.  முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு  அதனை திறம்பட எதிர்கொண்டது. கடந்த அதிமுக ஆட்சி ஓராண்டில் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தியிருந்த நிலை யில் ஆட்சிப் பொறுப்பேற்ற 9 மாதங்களில் திமுக அரசு 10 கோடி தடுப்பூசிகளை மக்க ளுக்கு செலுத்தி சாதனை படைத்துள்ளது. அதிமுக அரசு நிறைய தடுப்பூசி மருந்து களை வீணடித்தது.  திமுக சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

ஆகையால் குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாக அறிவித்த உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் விரைவில் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பொன். முத்து ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மா. கணேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  வேட்பாளர்கள் 23 ஆவது வார்டு  டி. குமரவேல், 56 ஆவது வார்டு   வை. ஜென்னியம்மாள், 63 ஆவது வார்டு கு.  கணேசன், 80 ஆவது வார்டு டி. நாக ராஜன், 83 ஆவது வார்டு ஏ. எஸ். செந்தில்  குமார், 86 ஆவது வார்டு பி. சாந்தி, 88 ஆவது வார்டு ஜே. சகுந்தலா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.   திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, மதிமுக தொண்டர்கள் ஏராள மானோர் பங்கேற்றனர்.