பதற்றம், நிலையற்ற சூழலுக்கு தள்ளப்படும் மேற்கு ஆசியா ஈரான் மீது போர் தொடுப்போம் என பகிரங்கமாக மிரட்டும் டிரம்ப்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
புதுதில்லி, ஜூன் 18 - ‘ஈரான் மீது போர் தொடுப்போம்; அந்நாட்டுத் தலைவர்களை படு கொலை செய்வோம்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பகிரங்க மாக கூறியிருக்கும் நிலையில், அவரின் இந்த மிரட்டல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: தலைவர்களுக்கு, டிரம்ப் பகிரங்க கொலை மிரட்டல்! ‘ஈரான் மீது போர் தொடுப்போம்’ என்ற ரீதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிக்கைகளை வெளியிட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய அறிக்கைகள் பதற்றத்தை மேலும் அதிகரித்திடும், ஒட்டுமொத்த மேற்கு ஆசியப் பகுதியையும் போர் மற்றும் ஸ்திரமற்ற தன்மையை நோக்கித் தள்ளிடும். ஈரானிய தலைவர்களை படுகொலை செய்வதாக வெளிப்படை யாகவே டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தி இருப்பதும், ஈரான் நிபந்த னையின்றி சரணடையவேண்டும் என்று அவர் கூறியிருப்பதும் மிகவும் வருந்தத்தக்கது. ஈரானையே குற்றம் சாட்டுவது கண்டிக்கத் தக்கது! மேற்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவக் கடற்படைகளை அதிக அளவில் நிறுத்தி வைத்திருப்பது, ஈரான் மீது தாக்குதல்களை நடத்து வதில் இஸ்ரேலுடன் இணைய அமெரிக்கா தயாராக இருப்பதையே குறிக்கிறது. இந்த முஸ்தீபுகள் ஆபத் தானவை மற்றும் பிராந்தியத்தையும் உலகையும் ஒரு பேரழிவு தரும் போரின் விளிம்பிற்குத் தள்ளும் அபாயம் கொண்டவை. கனடாவில் நடைபெற்ற ‘ஜி-7’ மாநாட்டின் சமீபத்திய அறிக்கை இந்தப் போர்வெறியை மேலும் அதி கரிக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு ஜி-7 நாடுகள் கண்களை மூடிக்கொண்டு, ஈரானை குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது. மூர்க்கமான இஸ்ரேல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் தொடர்ச்சி யான உறுதியற்ற தன்மைக்கு இஸ்ரேல் முதன்மைப் பொறுப்பாகும் என்பது தெளிவாகிறது. காசா மீதான இனப்படுகொலைத் தாக்குதலில் தொடங்கி, இஸ்ரேல் வேண்டுமென்றே சிரியா, லெபனான், ஏமன் மற்றும் இப்போது ஈரான் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் தனது ராணுவ நட வடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேலைக் கட்டுப்படுத்தாவிட்டால், பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மழுப்பலாகவே இருக்கும். அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியமும் சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறி, மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் தங்கள் மேலாதிக்கத்தைத் திணிக்க இஸ்ரேல் என்ற ஒரு முரட்டு அரசைப் பயன்படுத்துகின்றன. இஸ்ரேல் ஆதரவை இந்தியா கைவிட வேண்டும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு ராஜதந்திர நடவடிக்கை களுக்குத் திரும்புமாறு சர்வதேச சமூ கம் அவசரமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். பாஜக தலைமையிலான இந்திய அரசாங்கம் அதன் அமெரிக்க ஆதரவு, இஸ்ரேல் ஆதரவு வெளி யுறவுக் கொள்கை நிலைப்பாட்டைக் கைவிட வேண்டும். உலகளாவிய தெற்கிற்கு உண்மை யான அர்ப்பணிப்பு என்பது, இஸ்ரே லின் மற்றும் அதன் முக்கிய ஆதரவாள ரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரக் கோருவதற்கு மற்ற நாடுகளுடன் ஒற்றுமையைக் கோருவதே ஆகும். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)