தோழர்கள் கே. ரமணி, மைதிலி சிவராமனுக்கு புகழஞ்சலி
தமிழக அரசியலில் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினராக, தொழிற்சங்க முன்னோடியாக செயல்பட்ட தோழர் கே. ரமணி. பெண்ணடிமைத்தனம், சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் ஆகியோரின் நினைவு தினம் (மே 30) வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் தோழர்கள் கே. ரமணி, மைதிலி சிவராமன் ஆகியோரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.