tamilnadu

img

தோழர் பாப்பா உமாநாத் 11 ஆம் ஆண்டு நினைவு தினம்

திருச்சிராப்பள்ளி, டிச. 17 - சுதந்திர போராட்ட வீரரும், பெண் ணுரிமை போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவருமான மறைந்த தோழர் பாப்பா உமாநாத்தின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று திருச்சி பொன்மலை சங்கத் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் கடைப் பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்தியக்குழு உறுப்பி னர் வாசுகி,  மாநகர் மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், சம்பத், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், பழனிசாமி, சிவராஜ், வழக்கறிஞர் உ. நிர்மலாராணி,மாதர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட  தலைவர் ரேணுகா, புறநகர் மாவட்டச் செயலாளர் மல்லிகா, மாவட்ட தலை வர் லிங்கராணி, பகுதி செயலாளர் விஜ யேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், பகுதிக்குழு உறுப் பினர்கள் சீனிவாசன், புவனேஸ்வரி, மணிமாறன், கணேசன், டிஆர்இயு ராஜா, பழனி உள்பட கட்சியினர் மற்றும் வெகுஜன அமைப்பினர் தோழர் பாப்பா உமாநாத்தின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.  

;