tamilnadu

img

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பெரியகுளம், பிப்.15- தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள கும்பக் கரை அருவி மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு கள் காரணமாக இந்த அரு விக்கு செல்ல கடந்த 2  வருடங்களாக தடை விதிக்க ப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் கன மழை  பெய்தபோது கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டியது. அப்போது அருவியை பார்ப்பதற்கு கூட சுற் றுலா பயணிகள் அனுமதிக் கப்படவில்லை. தற்போது கொரோனா பர வல் குறைந்து வரும் சூழ் நிலையில் பல்வேறு தளர்வு களை தமிழக அரசு அறி வித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் சுருளி அருவி, மேகமலை அருவி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு விதி க்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதேபோல் கும்பக்கரை அருவிக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும் நீக்கப்படு வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதி யில் பெய்த மழை காரண மாக அருவியில் தண்ணீர் அதிக அளவு வருகிறது. கும்ப க்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து கும்பக் கரை அருவி நோக்கி படை யெடுக்கத் தொடங்கி உள்ள னர்.