tamilnadu

img

சிறு, குறு தொழில்களை இல்லாமல் செய்வதுதான் தாராளமயம்

திருப்பூர், ஜூன் 21- சிறு, குறு தொழில்களை இல்லாமல் செய்வது, எதுவுமே நிரந்தரமில்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் நவீன தாராளமயக் கொள்கை. அந்த கொள்கையைத்தான் பாஜக ஆட்சியா ளர்கள் தற்போது நடைமுறைப்படுத்து கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறினார். திருப்பூர் முருங்கப்பாளையத்தில் தோழர் கே.தங்கவேல் நினைவகத் திறப்பு விழா பொதுக் கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. முருங்கப் பாளையம் கிளைச் செயலாளர் துரை சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முருங்கப்பாளையம் பி கிளைச் செயலாளர் தனபால் வர வேற்றார். இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:  ஒன்று பட்ட கோவை, திருப்பூர் மாவட்டம் தோழர் கே.தங்கவேலை உருவாக்கி யது. சவாலான, நெருக்கடி மிக்க நேரத்தில் அவர் கட்சியின் கோவை  மாவட்டச் செயலாளராகப் பொறுப் பேற்று சிறப்பான பணியை மேற்கொண் டார். தொழிலாளி வர்க்க குணத்துடன் அவர் மேற்கொண்ட பணிகள், அவரது  அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு ஏராளமான நண்பர்களை அவர் பெற்றிருந்தார். நாம் செங்கொடி இயக்கத் தலைவரை இழந்திருக்கிறோம். அவரை பாதித்த கொரோனா ஆபத்து இன்றைக்கும் நீங்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது உடல் நலத்தைப் பேணுவது நம் குடும்பத்துக்கும் தேவை, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்ப தற்கும் தேவை என்பதை உணர்ந்து கம்யூனிஸ்ட் ஊழியர்கள் செயல்பட வேண்டும்.

பழைய உலகம் அல்ல

இப்போது நாம் வாழ்ந்து கொண்டி ருப்பது பழைய உலகம் அல்ல. உலகில் புதிய சூழ்நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ரஷ்யா - உக்ரைன் யுத்தம் உலகைக் கடு மையாக பாதித்திருக்கிறது.  இது நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று நேட்டோ ஜெனரல் கூறியிருக்கிறார். இந்த யுத்தத்தின் தாக்கம் இந்தியாவையும் பாதித்திருக்கிறது. இப்போது இருப்பது தொழில்கள் கடுமையாக பாதிக்கக்கூடிய காலம். தாராளமயக் கொள்கைகளால் சிறு, குறு தொழில்களை இல்லாமல் செய்வது என்ற நிலையை நோக்கி ஆட்சியா ளர்கள் போய்க் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஆறேழு சிறிய சர்க்கரை ஆலைகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. பஞ்சாலைகள் பெரும் பகுதி மூடப்பட்டு விட்டன. தொழில்கள் வேகமாக முடங்குகின்றன. வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. படித்து வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ‘ஜிக் (ஜிஐஜி)’ பொருளாதாரம் எனப்படும் தொகுப்பூதிய அடிப்படையில் மட்டுமே இனி வேலை என்ற நிலை ஏற்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சிறுதொழில் கள் மூடப்பட்டு விட்டன. 

பாஜக செய்வது என்ன?

இந்தியா இப்போது அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பாஜக பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுக ளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண் டிருக்கிறது. ஜனநாயகத்தை வளர விடாமல் பார்த்துக் கொள்வது, என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது என்ற நிலையில் பாஜக செயல்படுகிறது. பெருமுதலாளிகள் மதவாதத்தைக் கண்டிக்கும் நிலை என்பது இப்போது மாறி இருக்கிறது. ராமர் கோயிலைக் கட்டுவது எல் அன்ட் டி நிறுவனம்!  பாஜக ஆட்சியில் இன்றைய தாராளமய சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் சட்டத்தை மாற்று கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி மற்ற அரசியல் கட்சிகளைப் போன்ற ஒரு கட்சி அல்ல. ஆர்எஸ்எஸ் என்ற மதவெறி பாசிச இயக் கத்தின் அரசியல் பிரிவாக பாஜக செயல் படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு முடிவெடுத்தால் அது கட்சி யின் அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் பாஜகவின் தலைமை அப்படி முடிவெடுக்க முடியாது. அவர்களின் தலைமையிடம் தில்லி அல்ல. அவர்களுக்கான உத்த ரவு ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இருந்து வரும். அவர்களது தலைமை யிடம் நாக்பூர். இப்போது கூட ஜனாதி பதி தேர்தலில் யாரை நிறுத்துவது என்று ஆர்எஸ்எஸ் பேச்சுவார்த்தை நடத்து கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மதவெறி நடவடிக்கைகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான சேவகம் ஆகிய இரண்டையும் திறமையாக நிறைவேற்றக் கூடியவராக மோடி பிரதமராக இருக்கிறார்.  நாடு சுதந்திரம் பெற்றபோதே இந்திய அரசியல் சட்டத்தை ஏற்கா மல், இது நமக்கானது அல்ல என்று சொன்னது ஆர்எஸ்எஸ். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு அல்ல என்று சொல்லக்கூடியது ஆர்எஸ்எஸ். இந்தியாவின் மூவர்ணக் கொடியை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

நவீன மனுவாதம்

நூறாண்டுகளுக்கு மேலாக நடை பெற்ற சுதந்திரப் போராட்டத்தில் இந்து, முஸ்லீம், சீக்கியர்கள் ஒன்றாகச் சேர்ந்து  போராடி உருவானதுதான் மதச்சார்பற்ற இந்தியா. இந்த சுதந்திரப் போராட்டத் தில் பங்கேற்காதது ஆர்எஸ்எஸ். இந்திய அரசியல் சட்டத்தை ஏற்காத வர்கள். அவர்களது சட்டம் மனுநீதி சட்டம். அதை பழங்காலத்தில் இருந்தது போல் இல்லாமல் நவீன காலத்துக்கு ஏற்றது போல மாற்றி அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் எப்போதும் இந்தியா வின் மூவர்ண தேசியக் கொடியை ஏற்று வது கிடையாது. காவிக் கொடிதான் அவர்களது தேசியக் கொடி என்கிறார் கள். நூறாண்டு கால தேச விடுதலைப் போராட்டத்தில் உருவாக்கிய சித்தாந் தத்தை, ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடியதுதான் ஆர்எஸ்எஸ். அவர்களது நோக்கத்துக்கு ஏற்பத்தான் பாஜக அரசியல் சட்டத்தை மாற்றுகிறது.

ஜெனரல்கள் ஏன் பேசுகிறார்கள்?

மாநிலங்களுக்கு உரிமை தேவை யில்லை என்பது அவர்கள் கருத்து. மாநிலங்களுக்கு அதிகாரங்கள் கேட்கக் கூடாது என்பது அவர்கள் நிலை. அக்னிபாதை மிகப்பெரிய பிரச்சனை யாக வெடித்தபோதும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் முப்படை கூடுதல் செயலர் அனில்பூரி நாங்கள் இத்திட்டத்தை கைவிட மாட்டோம், இந்த அக்னிபாதை 1989இல் உருவாக்கப் பட்டது என்கிறார். கடந்த காலங்களில் ராணுவத் துறை செயலர்கள் பத்திரிகை யாளர்களை சந்திக்க மாட்டார்கள்.  ஆனால் கடந்த எட்டாண்டுகளில் ராணுவ ஜெனரல்கள்தான் பேசுகிறார்கள். தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதமர் பேசுவதில்லை.  மக்கள் தொகை கணக்கெடுப்பு முடித்தவுடன் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எண்ணிக்கையை 1000 பேராக உயர்த்தப் போகிறார்கள். அப்போது நாடாளுமன்றம் சந்தைக்கடை போல் இருக்கும். அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டி டத்தை விட்டு விட்டு புதிய நாடாளு மன்றக் கட்டிடம் ரூ.1200 கோடி செலவில் டாடா நிறுவனத்தின் மூலம் கட்டுகிறார் கள். இது தேவையில்லை என நான்  எம்.பி.யாக இருந்தபோது கடிதம் எழுதி னேன். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை 300இல் இருந்து 600 ஆக உயர்த்தியபோதும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதே போல் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ்  என எந்த நாட்டிலும் புதிய நாடாளு மன்றத்தைக் கட்டவில்லை. இது பற்றி கேள்வி எழுப்பினால் பாஜக ஆட்சியா ளர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நவீன தாராளமயம் அனைத்தை யும் நிரந்தரமற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறது. விலைவாசி கடு மையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. தொழிலும் நிரந்தரமில்லை. வேலை யிலும் யாரும் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் போரா டாமல் வாழ்வதற்கு வழியே இல்லை. இதற்காக பரந்துபட்ட அணியை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குறையில்லாத ஆட்சி என்று சொல்ல முடியாது. எனினும் ஒன்றிய அரசை எதிர்த்து உறுதியாக  நிற்பது நாட்டுக்கு நல்லது, ஜனநாய கத்துக்கு நல்லது. மாநில முதல்வர்கள்  பங்கேற்கும் மாநிலங்களுக்கிடை யிலான மன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கத் தக்கது.  இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.