tamilnadu

img

திருப்பூர் ஜல்லிக்கட்டு: 670 காளைகள் பங்கேற்பு

திருப்பூர் ஜல்லிக்கட்டு: 670 காளைகள் பங்கேற்பு

துக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டியில் 670 காளைகள் களம் கண்டு சீறிபாய்ந்தன. 28 பேர் காயமடைந்தனர்.  ஜல்லிக்கட்டு போட்டியை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை, திமுக மாவட்டச் செயலா ளர் கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்க ளில் இருந்து 670 காகைள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 179 பேர் களம் கண்டனர்.  போட்டியில் வெற்றி பெற்ற காளை களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள்  வழங்கப்பட்டன.  காளைகள் முட்டியதில் 18 மாடுபிடி வீரர்கள் உட்பட 28 பேருக்கு காயம் ஏற்பட்டது.  அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவின ரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக் காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனியார் கல்லூரியில் ரேசன் பொருட்கள் பதுக்கல்
கல்லூரி நிர்வாகி தலைமறைவு

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி யில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி யில் சட்டத்திற்கு புறம்பாக ரேசன் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக  கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகிகள் இருவர் தலைமறைவாகினர். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகில் பொரவாச்சேரியில் ஆண்டவர் நர்சிங் மற்றும் கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இக்கல்லூரில் கல்வியியல் மற்றும் நர்சிங் போன்ற பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதியும் செயல்படுகிறது. இக்கல்லூரி விடுதியில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ரேசன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி  மண்டல குடிமை பொருட்கள் வழங்கல்  குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்கா ணிப்பாளர் ஷீலாதேவி உத்தரவின்படி காவல்துறையினர் சோதனை நடவ டிக்கையில் ஈடுபட்டனர். கல்லூரியில் சோதனை இட்டபோது 55 மூட்டை 2700 கிலோ ரேசன் அரிசியும், 8  மூட்டை 400 கிலோ கோதுமையும், 3 மூட்டை  150 கிலோ பருப்பும் கைப்பற்றப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கல்லூரி நிர்வாகத்தின் தாளாளர் மற்றும் செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  இந்நிலையில் தாளாளர் மற்றும் செயலாளர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். முன்னதாக கீச்சாங்குப்பம் சேவா  பாரதி நகரில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை ஊழியர் ஒருவரும், அந்த நியாய  விலை கடையில் இருந்து ரேசன் பொருள் களை ஏற்றி கொடுத்த டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநரும் கைது செய்யப்பட்டனர்.