திருவண்ணாமலை, ஜூலை 9- மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களஆன்மீகவாதிகள் அல்ல அவர்கள் ஆன்மீக போலிகள் என்று முதலமைச்சர் தெரிவித்தார். திருவண்ணாமலையில் சனிக் கிழமையன்று (ஜூலை 9) அரசு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரை யாற்றினார். அப்போது, “திருவண்ணாமலை மாவட்டம் பண்பாட்டுச் சிறப்புக ளால் பரவி கிடக்கிறது. 217 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய அண்ணா மலையார் கோவில் அமைந்துள்ள இந்த திருவண்ணாமலைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் 1989 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக் கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி”என்றார். திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் மின்விளக்கு மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். மதத்தை வைத்து அரசியல் செய்ப வர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் ஆன்மீக போலிகள். மனிதர் களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்த கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அரசு அலுவலகங்களில் எந்தவித கோப்புகளும் தேங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும். மனசாட்சிக்கு விரோ தம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணி யாற்றி வருகிறோம். என் மீது மக்கள் வைத்திருக்க கூடிய நம்பிக்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த நம்பிக்கை என் மீது தனிப்பட்ட முறையில் வைத்த நம்பிக்கை அல்ல தமிழினம் ஒளி பெற நடந்து கொண்டு இருக்கிற திமுக ஆட்சியின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற உங்களில் ஒருவனாக உண்மையாக உழைப்பேன் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
கருணாநிதி சிலை திறப்பு
முன்னதாக, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதுப்பிக்கப் பட்ட அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு. கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துனைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.பெ.கிரி , அம்பேத் குமார்,ஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.