பைக் திருட்டு: வாலிபர் கைது
தூத்துக்குடி, மே 12-திருநெல்வேலி, தெற்கு செழியநல்லூர் ராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் சுப்பிரமணியன்(49). கயத்தாறையடுத்த சவலாப்பேரியிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வரும்இவர், தனது பைக்கை திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, கயத்தாறு டோல்கேட் அருகேயுள்ள தேனீர்கடை முன்பு வெள்ளியன்று இரவு நிறுத்தி விட்டு சனியன்று காலை வந்து பார்த்த போது அவரது பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில்,கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கயத்தாறு போலீசார் நடத்திய வாகனச் சோதனையின் போது வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த பைக்கைநிறுத்தி ஆய்வு செய்த போது, அது லாரி ஓட்டுநர் சுப்பிரமணியனின் பைக் என்பது தெரியவந்ததாம். மேலும், அவரிடம்நடத்திய விசாரணையில், தூத்துக்குடி, கே.வி.கே.நகர், டூவிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் விஜய்என்பதும், அவர் தற்போது கோவில்பட்டி பங்களா தெருவில் வசித்து வருவதும் தெரியவந்ததாம். அதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த பைக்கைபறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மார்க்கெட் நிலவரம்
கடலை எண்ணெய் 15 கிலோ -ரூ. 2200
நல்லெண்ணெய் 15 கிலோ தும்பை- ரூ. 4620+வரி
ஆர்பிடி பால்மோலியன் எண்ணெய் 15 கிலோ - ரூ. 985
குண்டூர் வத்தல் புதுஸ் 100 கிலோ - ரூ.9,500-10,000
வத்தல் நாடு - ரூ.7,500-8,800
முண்டு வத்தல் -ரூ.7,500-10,000
மல்லி லையன் 40 கிலோ -ரூ.3,100- 3,200
மல்லி நாடு 40 கிலோ -ரூ.3,000-3,300
துவரம்பருப்பு 100 கிலோ புதுஸ் நாடு-ரூ.7,200