சென்னை,ஜன.11- சென்னையில் செவ்வாயன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தற்போதைய கொரோனா தொற்று பரவலால் ஆக்சிஜன் அளவு பாதிப்போ, தீவிர சிகிச்சை அனுமதியோ தேவையில்லை. மருத்துவர்கள் ஆலோசனை மட்டுமே வழங்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டத்திலும் ஆட்சியர்கள் அலு வலகத்தில் கொரோனா கட்டுப் பாட்டு அறை செயல்படுகிறது. தற்போது ஒமைக்ரான் எஸ்.ஜீன் தொற்று அதிகளவு பரவுகிறது. பரிசோதனை செய்யக்கூடிய 100 பேரில் 85 பேருக்கு ஒமைக்ரான் எஸ்.ஜீன் பாதிப்பு உள்ளது. 15 பேருக்கு டெல்டா வைரஸ் உள்ளது. பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு வரு வதற்கு வாய்ப்பு இல்லை. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15 ஆம் தேதி (சனிக்கிழ மை) என்பதால் அந்த வாரம் மெகா தடுப்பூசி முகாமை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்த லாமா? என்பது குறித்து ஆலோ சித்து முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.